தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் 1 கோடி பரிசு
சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மிக பழமையான இந்துத்வா இயக்கமான அகில பாரத சத்ரிய மகாசபை சார்பில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள ஸ்வருப் பார்க் பகுதியில் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம். நடைபெற்றது. இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேவின் நூற்றுக்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் கொடும்பாவியாக கொளுத்தினர். பின்னர், பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய அகில பாரத சத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங், ‘ராணி பத்னினியின் தியாகத்தை பற்றி நடிக...